puvi

அன்பு ஒரே வானம் ஒரே பூமி ஒரே இறைவன் எனச் சொல்ல ஒன்றே குலம் எனும் ஆத்ம ஜீவனோடு அகத்திலும் அன்பே குடியிருக்கும்!

ஞாயிறு, 28 நவம்பர், 2010

இன்னொரு தாஜ்மஹால்

நான்
மன்னன் ஷாஜஹான் அல்ல
சலவைக்கற்களால்
தாஜ்மஹால் கட்ட…

நான்
உன் ஏழைக்கணவன்…
நமக்கு
சொந்தமாய்
ஒரு ஓலைக்குடிசைகூட
இல்லைதான்…

ஆனால்…

என்னால்
அதைவிட பெரிய மஹால்
கட்ட முடியும்
சலவைக்கற்களால் அல்ல…
அதைவிட உயர்வான
அன்பினால்!
                                                                  By-Puvi